கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று (09.08) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தலவாக்கலை டயகம பிரதேசத்தில் வசித்து வந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அதன்படி, இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும், பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
யுவதியின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.