இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) இன்று (23.08) அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டு ஒக்டோபர் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான குடிநீர் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், மாலைகள் போன்ற பொருட்களுக்கே இவ்வாறு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.