முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததது.
வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி நேற்றைய தினம் (22.08) காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து குமுழமுனை மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது.
வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டியில் பாடசாலையின் 200 மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளனர். கனடாவில் வசிக்கும், முன்னாள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மரதன் ஓட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் அனுசரணை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் முல்லை வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர், நிர்வாகப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.