ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதம் வாக்குகள் கிடைக்காது!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டு மூன்று கட்சிகள் போட்டியிட்டால் எந்தவொரு தரப்பினரும் 50 வீதமான வாக்குகளை பெற மாட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சி அரசியலை விட வேட்பாளர்கள் முன்வைக்கும் வேலைத்திட்டமும் அவர்களின் நடைமுறைத் தன்மையும் அடுத்த தேர்தலில் முக்கிய காரணியாக அமையும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது மற்றும் வேட்பாளர்களின் வயது போன்ற விடயங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான காரணியாக அமையும். 

இந்நிலைமையின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் இரண்டாம் விருப்புரிமையை பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் இந்நாட்டில் பல வாக்காளர்கள் இரண்டாம் விருப்புரிமையை பயன்படுத்தாத காரணத்தினால் அதுவும் பிரச்சினைக்குரிய நிலைமையாக மாறும். 

கடந்த காலத்திலிருந்து, இந்த நாட்டில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல்கள் அல்லது பொதுத் தேர்தல்களில் மிதக்கும் வாக்குகள் ஒரு வலுவான காரணியாக இருந்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பால், ஓட்டு போடாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Social Share

Leave a Reply