இன்னும் இரு தினங்களில் க.பொ.த உயர்த்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.