கொழும்பில் துப்பாக்கிசூடு – 6 வயது சிறுமி பலி!

நேற்று (17.09) மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது தந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதியுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய, சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதான் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply