வத்தளை, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (22.09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 35 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் எனவும், 05 அடி 06 அங்குல உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.