கொழும்பு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது!

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கன்யா பிரதான வீதியின் வெவெல்தெனிய திட்டவேல்மங்கட பகுதியில் இன்று (25.09) அதிகாலை 3.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 15 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply