அமெரிக்க நோக்கி விஜயம் மேற்கொள்ளும் கூட்டமைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 14ஆம் திகதியன்று அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடனான இன்றைய தின (09/11) சந்திப்பு பிற்போடப்பட்டது. சில முக்கிய விடயங்கள் காரணமாக இந்த சந்திப்பு பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version