வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தடைகளையும் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (09.10) அறிவித்துள்ளார்.
வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 ம் ஆண்டு மார்ச் முதல் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல பொருட்களுக்கு தடை விதித்திருந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி மீதான தடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை தொடர்ந்தது, அதன் பிறகு பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.