பேருந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி!

கட்டுநாயக்க, அடியம்பலம் பகுதியில் நேற்று (22.10) இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மட்டக்களப்பு செல்லும் இரவு நேர சொகுசு பேருந்தில் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version