தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி நீக்கம்!

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே அவர் பதவி நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply