மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டைகளை எடுத்துச் சென்ற இருவர் நேற்றுமுன்தினம் (11/11) சனிக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நகருக்குள் ஒரு முச்சக்கர வண்டியைச் சோதனையிட்டபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் வசம் 49 கடலட்டைகளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் மன்னார் விடத்தில்தீவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு எதிராகச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.