எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்

சப்புகஸ்கந்தை எபரிபொருள்சுத்திகரிப்பு நிலையகளஞ்சிய சாலையில் மசகு எண்ணெய் தீர்ந்துள்ளமையினால் இன்று(15/11) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இதனை தெரிவித்துள்ளன. இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுமெனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் மாறாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மசகு எண்ணெயை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமையே காரணம் என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றிய இணைப்பாளர் ஆனந்த பாலித்த சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version