இலங்கையில் போர் நிலைமையை, இன நெருக்கடியை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ளத் தவறியதால், தான் தேசத்துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக முத்தையா முரளிதரன் நேற்று (26.11) இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதாக சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு புரிந்துக்கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறிய அவர், அதற்குக் காரணம், தமிழகத்தைப் போலல்லாமல், இலங்கையில் நிலவிய பல்வேறுபட்ட சந்தர்ப்ப சூழல்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் சமூகத்தில் உள்ள துணைக்குழுக்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன என்றும் இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்தக் குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை உடைத்து தனி நாட்டை உருவாக்க விரும்புவதாகவும், ஆனால் பலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.