வத்தளை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!

வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும் பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை வெஹரஹேன பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தெமட்டகொட மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொழும்பு 9 பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி ரஜமல்வத்தை பிரதேசத்தில் கடந்த மாதம் 25ம் திகதி இடம்பெற்ற தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் காயமடைந்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்ற நபரொருவரின் வழிகாட்டலின் பேரில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாலைதீவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply