இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (07.12) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply