அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்ந்த தொழில்நுட்ப பிரிவு மாணவன் கிருபாகரன் கரல்ட்பிரணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய மட்ட போட்டிக்கு முன்னர் குறித்த மாணவன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.