மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது

இன்று(12.09) மாலை 05 மணிக்கு இலங்கை பூராகவும் ஏற்பட்ட மினா தடை 5 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் 80 சதவீதமே வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.மின் விநியோக நிலையங்கள் மற்றும் மின் பிறப்பாக்கிகள் மின்னல் தாக்கங்கள் காரணமாக பாதிக்கப்பட்டமையினால் ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர் ,மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பின் பிறப்பாக்கிகள் பல மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகியாமையினால் இந்த மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply