பண்டிகை காலம் அண்மித்துள்ள நிலையில், சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஒரு முட்டை 55 ரூபா முதல் 65 ரூபா வரை விற்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போதும் முட்டையொன்று 55 ரூபாவிற்கு மேல் விற்கப்படுகின்றது.
இதேவேளை, சந்தையில் கோழி இறைச்சியின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் உயர்வடையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையும் தற்போது அதிகரித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 440 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடமிருந்து உரிய வரிகளை அறவிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது.