வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் காரணமாக 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிங்காய் மாகாணத்திலிருந்து பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இதன்போது 200 இற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக கோங் மற்றும் கிங்காய் மாகாணங்களில் உள்ள கட்டிடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தற்போது வரை மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ச ர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.