மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மண்மேட்டினை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.