வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்..!

கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1500 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 40 சிறிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply