இடை நிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பம்..!

இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் 1,500 கிலோமீட்டர் சாலைகளை தரைவிரிப்புகளுடன் மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply