அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

பெறுமதி சேர் வரியை மேற்கோள்காட்டி அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply