ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனை அறிவித்ததோடு பதவி விலகல் கடித்தையும் கையளித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
விருப்பு வாக்கு பட்டியலுக்கமைய, இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.