கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13.01) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (13.01) மாலை 5.00 மணி முதல் மறுநாள் (14.01) காலை 9.00 மணி வரை அம்பத்தலே நீர் விநியோக பாதையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அறிவித்துள்ளது.