கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதிஇடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாக குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து வினாத்தாள் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த பரீட்சை இடம்பெறவுள்ள திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.