யாழில் பஸ் விபத்து – ஐவர் காயம்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை – குறிகட்டுவான் வீதியில் இன்று(23.01) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று பயணி ஒருவரை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டபோது, பின்னால் வந்த தனியார் பஸ், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஐவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply