கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..!

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சிப் பதவியில் இருந்து நீக்கி, சட்டத்தின் முன் நிறுத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினரால் ஜனாதிபதி செயலாளரிடம் குறித்த கடிதத்தை கையளித்துள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சரை தற்போது வரை அமைச்சுப் பதவியில் வைத்திருப்பது மக்களின் நம்பிக்கையை மீறும் செயலாகும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபியூலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டமைக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் செயற்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply