பொலிஸ் நிலைய அதிகாரிகள் பணிநீக்கம்

பணாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இன்று (17/11) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணாமுர பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைக்கூண்டுக்குள்ளேயே உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பொறுப்பிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மனைவி, பிள்ளைகளை தாக்கிய குற்றச்சாட்டுக்காக உயிரிழந்த நபரின் மனைவி பணாமுர பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் நேற்றிரவு (16/11) கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும் இன்று காலை சிறைக்கூடத்தில் குறித்த நபர் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்ததற்கமைய, அங்கு விரைந்த உயிரிழந்த நபரின் உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்ப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version