தண்டனைச் சட்டக்கோவையில் வன்புணர்வுக் குற்றம் தொடர்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கும் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண் பிள்ளைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தப்படுவது குற்றச்செயல் எனவும், அதனை தண்டணை சட்டக்கோவையில் அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.