மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளருக்கு 15 இலட்சம் நன்கொடை!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி, பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். மேலும் , உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் சார்ஜன்டாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply