சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மீனவர்களிடமிருந்து படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன..

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று (08) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதன்பின்னர் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version