இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் இடங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவ கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (09) அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானதம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிகளவில் நீர் அருந்துமாறும் வெளிப்புறச்செயற்பாடுகளை தவிர்த்து சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது.

Social Share

Leave a Reply