பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார நெப்கின் (அணையாடை) பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளுக்கமைய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.