அலகல்ல மலையேறச் சென்ற போது தவறி வீழ்ந்த மாணவன்

கண்டி அலகல்ல மலையிலிருந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்துள்ளார்.

அலகல்ல மலையேறுவதற்கு மாணவர்கள் குழுவொன்றுடன் சென்ற பொது இன்று காலை மாணவர் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவர் சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயம்ப பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே விபத்தில் சிக்கியுள்ளார்.

கீழே வீழ்ந்த இளைஞனை மீட்க பெரகலை இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

Social Share

Leave a Reply