நாடளாவிய ரீதியில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போதியளவு நீர் அருந்துதல், வெளிச் செயற்பாடுகளை தவிர்த்தல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.