விபத்தில் சிக்கி இளைஞர் பலி

கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (18/11) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராஜலிங்கம் மதுராங்கன் என்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய், தந்தை, சகோதரி மற்றும் உறவினர் உட்பட ஏழு பேர் தமது புதல்வியின் பதிவு திருமணத்திற்காக வவுனியா – தோணிக்கல்லில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேளை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஏனைய ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், வாகனத்தை செலுத்திய இளைஞர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைகளின் பின்னர் வவுனியாவிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி இளைஞர் பலி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version