மூடப்பட்டது திருப்பதி

திருப்பதியில் 13 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் வீதி, நடைபாதைகள் என்பன மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுவதாக தகவல் வெளியாகயுள்ளது.

திருப்பதி, திருமலையில் நேற்று முன்தினம் (17/11) இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அதேநேரம் கோவிலை ஒட்டிய தெருக்கள், கடைகள், வீதிகள் என்பன மழை வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் திருப்பதி திருமலையில் கொட்டிய கனமழையால் 13 இடங்களில் மண்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையொட்டி ஏழு மலையான் கோவிலுக்குச் செல்லும் வீதி மற்றும் நடைபாதை என்பன மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மூடப்பட்டது திருப்பதி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version