இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் மன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு(20) தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னாரில் 2 படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையில் 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 23 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.