மன்னார் மாவட்ட அபிவிருத்திச் சபையின் புலம்பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை நிலையம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலைய திறப்பு விழா மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலக தரைத்தளத்தில் இன்று(21) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை நிலையத்தையும் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலையத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தை, மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், புலம்பெயர் உறவுகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மாவட்ட அரசாங்க அதிபர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளூர் கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.