யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு கடற்படையினரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கிலோ கிராமிற்கு அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.