உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை குற்றவியல் நடைமுறை (திருத்தம்) சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) மற்றும் விஷ பொருட்கள், ஒளடதம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் மீதான விவாதம் இடம்பெற உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை
எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.