போதைப் பொருளுடன் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் போதைப் பொருளுடன் இலங்கை மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது, சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் 02 பல நாள் மீன்பிடி படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

Social Share

Leave a Reply