தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 பேரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்படி, எதிர்வரும் 06ஆம் திகதி வரை அவர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, நீதவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.