போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று(23.04) பகல் 12 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. 

ஏழாயிரத்து ஐநூறு ரூபா சம்பள அதிகரிப்பு, மற்றும் அடிப்படை வசதிகளை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டுமெனவும் 13 வருடங்களாக வழங்கப்படாதிருக்கும் பதிற்கடமைகளுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கக்கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டக்காரார்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி அலுவலர்களால் இன்று(23.04) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply