ஒரு விக்கெட்டினால் தப்பிப்பிழைத்த Mannar Kings அணி – NPL 2024

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் Kilinochi Fighters அணிக்கு எதிரான போட்டியில் Mannar Kings அணி வெற்றி பெற்றுள்ளது. 

வவுனியா நகர சபை மைதானத்தில் இன்று(27.04) மாலை 2 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kilinochi Fighters அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, Kilinochi Fighters அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

Kilinochi Fighters அணி சார்பில் முகுந்தன் நிதுஷன் 39 ஓட்டங்களையும், என் யதுஷன் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர் 

Mannar Kings அணி சார்பில் பந்துவீச்சில் எஸ் சுஜன் மெயாஸ் 4 விக்கெட்டுகளையும், எட்வர்ட் குலாஸ் 3 விக்கெட்டுகளையும், எல் குகவரதன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

118 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Mannar Kings அணி 18.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

Mannar Kings அணி சார்பில் எட்வர்ட் குலாஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் எம் சுமித் 18 ஓட்டங்களையும், வி மில்டன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

Kilinochi Fighters அணி சார்பில் பந்துவீச்சில் குகபிரியன் தெய்வேந்திரம் மற்றும் ஜஜீவன் வைத்திலிங்கம் தலா 3 விக்கெட்டுகள கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் Mannar Kings அணி ஒரு விக்கெட்டினால்  வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக  Mannar Kings அணியின் எட்வர்ட் குலாஸ் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply