சென்னைக்கு அதிர்ச்சியளித்த பஞ்சாப் அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

சென்னையில் இன்று(01.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி சார்பில் அணித் தலைவர் ருத்துராஜ் கெய்க்வாட் 62 ஓட்டங்களையும், ரஹானே 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

பஞ்சாப் அணி சார்பில் ஜோனி பேர்ஸ்டோ 46 ஓட்டங்களையும், ரைலி ரூசோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர், ரிச்சட், சிவம் துபே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின்  ஹர்ப்ரீத் பிரார் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 8 புள்ளிகளுடன் 7ம் இடத்திற்கு முன்னேறியதுடன், சென்னை அணி 10 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 4ம் இடத்தில் உள்ளது.  

Social Share

Leave a Reply