பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் சிக்கிய போதைப்பொருள்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹெஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களும், 1.5 மில்லியன் ரூபா பணமும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருள் தொகை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபரான டுபாய் கபிலவுக்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

Social Share

Leave a Reply