ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹெஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களும், 1.5 மில்லியன் ரூபா பணமும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபரான டுபாய் கபிலவுக்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.